நுவரெலியாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில், பெண் பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) ஒருவரைப் படுகொலை செய்துவிட்டுத் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் மற்றும் அவரது சட்டப்பூர்வ மனைவி ஆகியோரை, யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். இது குறித்து நுவரெலியா பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் நட்பு
(Chandramowleeswaran Viswanathan)
என்னிடம் ஆலோசனைக்கு வந்த ஒருவர் 50 வயது ஆண். தனியார் நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் பணி செய்கிறார்.பேஸ்புக்கில் நட்புடன் பலருடன் பழகுகின்றவர் பல்வேறு விஷயங்களில் கமெண்ட் என்று கலகலப்பாக இருப்பவர் பேஸ்புக் மூலம் 40 வயது பெண்மணி ஒருவருடன் அறிவு பூர்வமான நட்பு உருவாகி இருக்கிறது.

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்
குளிரூட்டிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்களுக்குத் தடை
2027 முதல் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு புதிய சுற்றறிக்கை
அரசாங்கப் பாடசாலைகளின் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டல்களை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகத் தமது கடமைகளை வகிக்கும் பிரதமர், இந்தப் பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி
ஈரான் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக தளர்த்தியதை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் WTI (West Texas Intermediate) கச்சா எண்ணெய் விலை 73.67 அமெரிக்க டாலர்களாகவும், ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 77.54 அமெரிக்க டாலர்களாகவும் பதிவாகியுள்ளது.
யாழ்., விமான நிலையத்தில் நடராஜர் சிலையை நிறுவவும்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை, குறித்த வளாகத்தில் பிரதிஷ்டை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரிடம், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் பல உணவுகளுக்குத் தடை
பாடசாலை மாணவர்களுக்குச் சத்தான, பாதுகாப்பான மற்றும் மலிவு விலையிலான உணவுகளை உறுதிப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ஆரோக்கியமான பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைக்கான வழிகாட்டல்கள்’ பிரகாரம், சில உணவுப் பொருட்கள் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ளன.
கொழும்பில் பரபரப்பு: இப்படியெல்லாம் நடக்குதா…
“குழந்தை அடிக்கடி அழுகிறாள்” என்ற கோபத்தில், 9 மாதமேயான பிஞ்சுப் பெண் குழந்தையொன்றை நாற்காலியில் அமரவைத்து, கை, கால் மற்றும் வயிற்றுப் பகுதிகளை ஒன்றாகச் சேர்த்து இறுக்கமாகக் கட்டி, குடைக்கம்பியினாலும் கைகளினாலும் கொடூரமாகத் தாக்கிய சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனா சில்வா உத்தரவிட்டுள்ளார்.